உறைந்திருக்கும் வசந்தம்
எனது காதலையெல்லாம் காகிதத்தின் ஒற்றைப் பக்கத்தில் கவிதையாக்க முயற்சித்த காலங்கள்
எனது காதலையெல்லாம் காகிதத்தின் ஒற்றைப் பக்கத்தில் கவிதையாக்க முயற்சித்த காலங்கள்
சாதனை எதற்கு? வாழ்வின் சோதனைகளிலிருந்து மீளவா, இல்லை பேர் கிடைக்கவா, இல்லை வாழ்வைக் கழிக்கவா! தன்னை வருத்தி சாதகம் செய்வதால் கிடைக்கும் சமுதாய அந்தஸ்திற்கு சமுதாயம் கொடுக்கும் பட்டம்தான் ‘சாதனை’ தன்னை வருத்தி சாதகம் செய்யும் போது சிந்திய வியர்வைத் துளிகளுக்கும், மனதில் உதித்த எதிர்பார்ப்புக்கும் தக்க பதில்- உணர்வு ரீதியாக கிடைக்கும் போது கிளம்பும் எதிர்மறை உணர்வுதான் ‘வேதனை’ வேதனைகளைத் தாண்ட சோதனைகளைத் தாண்டி சாதனைகளைத் தேண்டியவனுக்கு வேதனைகளே பரிசனால்- அதுதான் சாதனையின் வேதனை. நாகயூர் [...]
இருள் வானமாய் இருந்தேன் விடிவெள்ளி போல் வந்தாய் ஆனந்தத்தின் அந்தம்வரை சென்றுவிட்டேன் விடிந்தபின் மறைந்திடுவாய் என்பதனை எண்ணவில்லை நிலவென்று சொல்லவில்லை தேய்ந்திடுவாய் என நினைத்து இப்போதான் புரிகிறது தேய்வது நீ இல்லை நான் என்று … கடுகளவும் களங்கமில்லா கன்னிஎன்று காத்திருந்தேன் கடைசிவரை காட்டவில்லை கருணையது என்னிடத்தில் காலத்தின் கட்டளையில் நீ என்ன நான் என்ன காதல் ஒரு கண்ணாமூச்சிதானே…… நாகயூர் நந்தா
நீ நினைத்திருக்கலாம் நான்அதுபற்றி கதைக்காமலேஇருந்திருக்கலாம் என்று…! ஒரு வகையில் நீநினைப்பது சரியாகப்பட்டாலும்…! ஒருவகையில் நான்பேசியதும் சரியாகத்தான்படுகின்றது….! ஒருவகையில் அதுவிழிச் சந்திப்புகளில்வெளிப்பட்டிருக்கலாம்…! அது புனிதமானதுபுனிதத்தின் நிழலைக்கூடதீண்டும் தகுதி எனக்கில்லை நீ….இத்துணை ஆண்டுகளில்நான் கண்டெடுத்த அழகுபொக்கிசம்…! நானாக நினைத்தாலும்உன்னை இழக்கும்சக்தி…எனக்கில்லை…! இருந்தாலும்…விளக்கைக் காதலித்துஅதனூடே மரணிக்கும்ஈசல் வாழ்க்கைஎன்னுடையது….! கடலைப் பார்த்திருப்பாய்…! எத்துணை முயன்றாலும் கரைகடக்க முடிவதில்லை அதனால்அலை கரை கடக்கும்வரையுமே அதனை இரசிக்கஒண்ணும்…கரைகடந்தஅலை – ஆழிப்பேரலைநீயும் நானும்சுற்றமும் சேர்ந்துகாணாமல் போய்விடுவோம். சிறு தென்றலாய்….மர ஸ்பரிசங்களைவருடிச் செல்லத்தான் உரிமை உண்டு எனக்கு – [...]
எனக்கு என்னைப் பிடித்திருப்பதேஉனக்கு என்னைப் பிடித்திருப்பதால்தான். அந்த மூன்று வார்த்தைகளைக் கேட்டாலும்”எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்” என்றுவெட்கப்படுகிறவளை என்ன செய்ய? கோபமாய் நீயென்னை முறைக்கும்போதெல்லாம் எனக்கு வருத்தமாயிருக்கிறது. ஓவியனாய்ப் பிறக்கவில்லையென! உன் வாசனையைஎன்னுடன் கூட்டிச்செல்வதற்காகவேதினமும் உன் கைக்குட்டை வாங்கிச் செல்வேன். உனக்கொரு ரகசியம் சொல்வதாக நானும்,எனக்கொரு ரகசியம் சொல்வதாக நீயும் சந்தித்தபோது,இரண்டுமே ஒன்றுதான் என்பதறிந்துரகசியமாய்ச் சிரித்துக் கொள்ளும் காதல்! *இதுவரை நீ வந்தகனவுகளையெல்லாம் சேர்த்துஒரே கனவாக காணும்ஓர் இரவு கிடைக்குமா? *ஒவ்வொரு சந்திப்பிலும் நிரூபிக்கிறாய்.கவிதையென்பது எழுதப்படுவதன்றுநிகழ்த்தப்படுவது என்று! *தூசிவிழுந்த [...]
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்வாழ்வின் சில குறியீடுகளாககாதல்…! தொலைவாகிப்போகும்புள்ளிகளாக…ஒரு விளிம்பில் நான்மறுவிளிம்பில் அவள் காலங்கள் கனவாய்ப் போனபின்நெருப்பில் நின்றுகூடநீ…அழக்கூடும்…! கண்ணீரைப்போலவே காதலும்கணத்தின்பாதியில்உன்… கண்முன்னே கருகக்கூடும்…! ஒரு இனந்தெரியாத இராகம்நரம்புகளில் வீணைமீட்டஒரு மர்மசோகம் ஓடிவந்து மனசைத்தாக்கஅப்போது…யார் அழுவார் – உன்நெஞ்சின் சோகம் தீர்க்க…??? பூக்களுக்கும் முட்களுக்கும்இடையில்…சிறியதூரம்தான் சில சமயங்களில்…முட்களின் தூரம்வரைத்தான்உன்னால் பயணிக்கமுடியும் காயங்களுக்கு நடுவில்பிரிவுகளும்… சிலநேரம் வசப்படலாம் யாருடைய பிரிவையும் யாராலும் தடுக்கமுடியாத நிலையில்…!!!
பகலா இரவா புரியாத காலநிலை எப்போதுமின்றி என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது இதயம் விட்டு விட்டு அடிக்கிறது என்னை அந்தரத்தில் தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது சில மணித்தியால சலனங்கள் தொடர்ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம் ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது அன்பாய் உன்னை வருட முடியாது காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள் அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக என் உணர்வுகளே உங்களுக்கு ! மதிக்கத்தான் நினைக்கிறேன் [...]
நான் கண்ட முத்து என் நெஞ்சில் பூத்து தினம் கனவில் வந்து நிற்கிறாள் கை கோர்த்து அவளோ பூங்கொத்து
எப்போதும் உன்னுடன் இருப்பேன் என்று சொன்ன நினைவு மட்டும் இப்போதும் என்னுடன் இருக்கிறது